குழந்தையை சரியாக பராமரிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தால் அதிகாரிகளிடம் பெண் குழந்தையதை ஒப்படைக்க மறுத்த சுகானியிடம், மகளிர் ஆணைய உறுப்பினர் ஃபிர்தௌஸ் கான் தாங்கள் குழந்தையின் குடும்பத்தை கண்டுபிடிக்க மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து விளக்கினார்.
கலவரத்தின்போது அந்த குழந்தை மசூதி ஒன்றின் அருகே அமர்ந்துகொண்டு, அதிர்ச்சியான மனநிலையுடன் அழுது கொண்டிருந்தது என்று சுகானி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
காவல் துறையினரை அணுக அச்சமாக இருந்ததால் அவர்களிடம் குழந்தை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர் மகளிர் ஆணையத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சுகானி குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.