உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 168 பேர். இதில் 11 ஆயிரத்து 947 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் பாதித்தவர்கள் 89 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7, 560 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் 41 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டனர். 4,313 பேர் பலியாகினர். ஜப்பானில் 3, 139 பேர் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 13, 912 பேர் பாதிக்கப்பட்டு 231 பேர் இறந்துள்ளனர். இலங்கையில் 159 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர்.
ஈரானில் 55 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டு, 3,452 பேர் பலியாகினர். ஜெர்மனியில் 96 ஆயிரத்து 092 பேர் பாதிக்கப்பட்டு 1,444 பேர் பலியாகினர். பெல்ஜியத்தில் 18 ஆயிரத்து 431 பேர் பாதிக்கப்பட்டு 1,283 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்தில் 16,627 பேர் பாதிக்கப்பட்டு 1,651 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் 2,818 பேர் பாதிக்கப்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3, 671 பேர் பாதிக்கப்பட்டு 99 பேர் பலியாகி உள்ளனர்.